கோவை, ஜூன் 17– இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் அசோக் சாதிய ஆதிக்க சக்தியினரால் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய இந்த சம்பவத்தையடுத்து வாலிபர் சங்கத்தின் ஊழியர்கள் நாடு முழுவதும் கண்டன இயக்கங்கள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் பெரிய நாயக்கன்பாளையம், கோவை வடக்கு, எஸ்எஸ்.குளம், சிங்கை நகரம் பல்வேறு பகுதிகளில் தோழர் அசோக் உரு வப்படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.