அவிநாசி, ஜூன் 19- கல்வி உரிமைச் சட்டப்படி இலவச சேர்க்கப்பட்ட மாணவர் களிடம் கட்டாயப்படுத்தி கல்விக் கட்டணம் வசூலித்த குன்னத்தூர் கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குன்னத்தூர் கொங்கு மெட்ரி குலேஷன் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்ந்த பிள்ளைகளின் பெற்றோர் களிடம் சட்டவிரோதமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். பெற்றோர்களை மிரட்டும் பள்ளியின் முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஏழை குழந்தைகளின் கல்வி நலன் காத்திட இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி சேர்த்த குழந்தைகளிடம் சட்டவிரோதமாக கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது. மேலும் பாட புத்தகம் வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களும் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் பால முரளி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் குன்னத்தூர் பகுதி நிர்வாகி பொன்னுச்சாமி, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சுரேஷ், ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னத்தூர் நகர கிளைச் செய லாளர் சின்னச்சாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். சட்டவிரோதமாக கட்டணம் வசூலித்த இப்பள்ளி மீது நடவ டிக்கை கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பெற்றோருடன் மனு அளிக் கப்பட்டது. ஆனால் இதுவரை எவ் வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து ஊத்துக்குளி வட்டார கல்வி அதிகாரிகள் அழைத் தன்பேரில், வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம், பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் ஆர்.குமார் தலை மையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இப்பேச்சு வார்த்தையில், கல்வி கட்டணம் கட்டத் தேவையில்லை. பாடப் புத்தகம் வழங்காத குழந்தை களுக்கு பாடப்புத்தகங்கள்வழங்க வேண்டும் என பள்ளி நிர்வா கத்திடம் உத்தரவிட்டுள்ளோம் என் றனர். மேலும் பேருந்து கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கை கொடுக்கு மாறு பள்ளி நிர்வாகத்திடம் கூறி யிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை தரு மாறு கேட்டுள்ளதாக தெரிவித் தனர்.