tamilnadu

அவினாசி ,ஈரோடு முக்கிய செய்திகள்

3 மாதமாக குடிநீரின்றி தவிப்பு கிராம மக்கள் புகார்

ஈரோடு, ஆக. 5- மொடக்குறிச்சி அருகே 3 மாதங்களாக குடிநீர் பிரச் சனை தீர்க்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரி வித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றி யம், 24 வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத் கர் நகரில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக  ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்ததையடுத்து தண்ணீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டது. காவிரி நீர் விநியோகமும் செய்யப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் தண்ணீரின்றி கடுமையாக அவ திப்பட்டு வருகின்றனர்.  இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்த போது, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி யளித்திருந்தனர். ஆனால் தேர்தல் முடிந்து 2 மாதங்களா கியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள் ளனர். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதை யடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி ஊராட்சி களின் இயக்குநருக்கு ஆட்சியர் கதிரவன் அறிவுறுத்தியுள் ளார்.

சேவூரில்  ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவினாசி, ஆக. 5 – சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு 130 மூட்டை நிலக்கடலை வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.6 ஆயிரத்து 400 முதல் ரூ.6 ஆயிரத்து 620  வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5 ஆயி ரத்து 800 முதல் ரூ.6 ஆயி ரத்து 90 வரையிலும், மூன் றாவது ரக நிலக்கடலை ரூ.5 ஆயிரத்து 300 முதல் ரூ.5 ஆயிரத்து 550 வரை யிலும் ஏலம் போனது.மொத் தம் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.