tamilnadu

img

பீகார் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

நாமக்கல், மே 22- நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த பீகார் மாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வந்த கல்லூரி மாணவ, மாணவியர்களை சிறப்பு ரயில் மூலம்  மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வியாழனன்று  வழியனுப்பி வைத்தார்.  நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் பணி புரிந்து வந்த பீகார் மாநில தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த மாணவ, மாணவி யர்கள் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை களையொட்டி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இதனையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் பீகார் மாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.  24 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயிலில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1,464 நபர் கள் மட்டும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதனடிப் படையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 860 நபர்களும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 604 நபர்களும் வியாழனன்று மாலை 4.30 மனியளவில் பீகார் மாநிலத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.