ஆட்டோ தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்
தருமபுரி, ஆக.17- ஆட்டோ தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு சிஐடியு தருமபுரி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு தருமபுரி மாவட்ட கே.எம்.ஹரிபட் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி நகரில் சுமார் ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆட்டோ தொழிலை நம்பி ஆயிரத் திற்்குaம் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சமீபகாலமாக ஆட்டோ தொழிலாளர்கள் மீது தருமபுரி நகர காவல்துறை பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வரு கிறது. சிறு,சிறு காரணங்களை காட்டி பொய்வழக்கு பதிவு செய்யப் படுகின்றன. மேலும், தேவையில்லாத அபராதம் விதிப்பது, ஆட்டோ தொழிலாளியிடம் செல்போன் பறிப்பது, ஆட்டோவை சேதப் படுத்தி, தொழிலாளர்களை ஆபாச மாக திட்டுவது போன்ற செயல் களில் காவல்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். ஆகவே, ஆட்டோ தொழிலா ளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை காவல்துறை கைவிடவேண்டும். தருமபுரி நகரம் முழுவதும் அதிக மக்கள் சந்திக்கும் பகுதிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும் பகுதி, முக்கிய கடை வீதிகளில் ஆட்டோ ஸ்டேண்ட் உருவாக்கி தர வேண்டும். ஸ்டேண்டில் அடிப் படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய பேருந்து இயக்கம், வளர்ச்சிப் பணிகள் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு
தருமபுரி, ஆக.17- அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி யில் அரசு பேருந்து இயக்குதல் மற்றும் வளர்ச்சிப்பணிகள் புறக்கணிக்கப்படுவ தாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில், 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் தரும புரி, அரூர் ஆகிய இரண்டு கோட்டங்கள் உள்ளன. அரூர் கோட்டத்தில் அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் பெரும்பாலான மலைக் கிராமங்களை சார்ந்தே உள்ளது. இங்கு பழங்குடி மற்றும் தலித் மக்களே அதிகளவில் வசிக் கின்றனர். இம்மக்களுக்கு விவசாய நிலம் கிடையாது. இதனால் இவர்கள் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு கூலிவேலைக்காக சென்று வருகின்றனர். குறிப்பாக சிட்லிங், நரிப்பள்ளி, சித்தேரி மலை, ஏ.கே.தண்டா ஆகிய பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாமல் அவதியுற்றுவருகின்றனர். அதேபோல் மாவட்டத்தின் முக்கிய ரயில்நிலையமான மொரப்பூருக்கு குறிப் பிட்ட நேரத்திற்கு சென்று வர பேருந்து இயக்க வேண்டும். அரூர் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டத்தில் இருந்து பெங்களூரு மற்றும் ஓசூருக்கு செல்ல மொரப்பூர் கம்பைநல்லூரி வழியாக பேருந்து இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பல கிராமங்களில் பள்ளி,கல்லூரி செல்லும் நேரங்களில் பேருந்து இயக்க வேண்டும். இப்பகுதியில் இருந்து வெளி மாவட்டங் களுக்கு பேருந்து இயக்கவேண்டும் என அப்பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அரூர், பாப்பிரெட்டிப் பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து பல கிராம மக்கள் பேருந்து வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்துள் ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 17 ந் தேதியன்று தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் புதிய வழித்தடங்களில் 30 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்தார். அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்கோட்டில் புதிய நகரப் பேருந்து துவக்கி வைத்தல் நிகழ்ச்சியும் நடை பெற்றது. இதில் தருமபுரி பாலக்கோடு, பென்னாகரம், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய கிளைகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலத் தின் சார்பில் 30 பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைத்தார். ஆனால் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு ஒரு பேருந்துகள் கூட இயக்கப்படவில்லை. இது அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணி களில் மேற்குறிப்பிட்ட தொகுதிகளை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
சணல் சாக்குப் பை குடோனில் தீ விபத்து
தருமபுரி, ஆக.17- தருமபுரி அருகே குண்டல்பட்டியில் சணல் சாக்குப் பை குடோனில் வெள்ளி யன்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான சணல் சாக்குப் பைகள் சேதமடைந்தன. தருமபுரி அருகே குண்டல்பட்டி என்ற இடத்தில் ஆனந்தன் (30) என்பவருக்கு சொந்தமான சணல்சாக்குப் பை குடோன் உள்ளது. இந்த குடோனில் திடீரென தீப் பற்றி எரிந்தது. சாக்குப் பை தீயில் கருகியதால் அதிலிருந்து வெளியேறிய புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இத்தகவலறிந்த தீயணைப்பு துறை யினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்தால் சுமார் ரூ.50 லட்சம் மதிப் பிலான சணல் சாக்கு பைகள் தீயில் கருகியது. தீ விபத்து குறித்து மதிகோண் பாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.