tamilnadu

img

குடிமராமத்து பணிகளில் ஊழல் குடிமங்கலத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, அக். 20- குடிமராமத்து திட்ட வேலைகளில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  இராம சந்திராபுரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. முதலமைச்சரின் குடிமராமத்து திட் டத்தின்கீழ் 2019-20 ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன் றியத்தில் அணிக்கடவு கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கம் என்ற பெயரில் வேலைகள் செய்யப்பட்டு உள்ளது. இப்படி ஒரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது இப்பகுதி யில் உள்ள பெரும்பான்மையான விவ சாயிகளுக்குத் தெரியாது. இந்நிலை யில் எங்கு கூட்டம் நடைபெற்று சங் கம் துவங்கப்பட்டது என வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லை. மேலும் பணி எண் W32/571 வேலையில்  பாசன விவ சாயிகளிடம் வேலைக்கான பங்க ளிப்பு தொகை பெறாமல், போலியா கவே ஒப்பந்ததாரர் சொந்த நிதியில்  செலுத்தியுள்ளார். எனவே, அரசு நிதியை மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிளை செயலாளர் விஜ யகுமார் தலைமை தாங்கினார். குடிமங் கலம் ஒன்றிய செயலாளர் என்.சசி கலா, மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மேலும், இராமசந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுப டும் நபர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப் பப்பட்டன.