திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், வாக்குகள் எண்ணிக்கையில் பணியாற்றவுள்ள நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் புதனன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ராம்கோபால் (திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு), ராம் நிவாஸ் ஜாட் (கோபிசெட்டிபாளையம், அந்தியூர்) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடை பெற்றது.