சிஐடியுவினர் வாகன பிரச்சார இயக்கம்
கோவை, செப்.11- இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கோவை மாவட்ட தொழில் பாதுகாப்பு மாநாடு வெள்ளியன்று நடைபெற உள்ள நிலையில், அதனை விளக்கி புதனன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிஐடியுவினர் வாகன பிரச்சாரத்தில் ஈடு பட்டனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமை யான தொழில் நெருக்கடியின் ஒருபகுதியாக தொழில் நகரமான கோவை வெகுவாக பாதித்துள்ளது. இதைத்தொடர்ந்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் தொழில் முனைவோர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் தொழில் பாதுகாப்பு மாநாடு வெள்ளியன்று (செப்.13) நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. கோவை நேரு நகர் சுகுணா ஆடிட் டோரியத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன், பொரு ளாதார அறிஞர் ஜெயரஞ்சன் மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர் இந்நிலையில், இம்மாநாட்டை மக் கள் மத்தியில் கொண்டு செல்லும் வகை யில் பல்வேறு வகையிலான பிரச்சார இயக்கத்தை சிஐடியுவினர் மேற்கொண் டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகன பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியு திட்டமிட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பிரச்சார இயக்கம் புத னன்று துவங்கியது. நான்கு முனைகளில் இருந்து துவங் கிய இப்பிரச்சார இயக்கத்தை ஆர்ஜி புதூர் பகுதியில் சிஐடியு மாவட்ட தலை வர் சி.பத்மநாபன் துவக்கி வைத்தார். இவ் வியக்கத்தில் சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட சிஐடியு நிர்வாகிகள் மற்றும் இணைக் கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். வியாழனன்றும் இவ் வியக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது.