tamilnadu

img

அரசு கலைக்கல்லூரியில் வணிக கணக்கியல் கருத்தரங்கம்

அவிநாசி, செப். 27- அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் வணிக கணக்கியல் கருத்தரங்கம் வியாழ னன்று நடைபெற்றது  அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் க்ளோபஸ் லெக்சர் சீரீஸ் - 2” என்ற பெய ரில் “ பன்னாட்டு வணிகத்திற்கான, வணிக கணக்கியல் முறைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யில் பேரா.மஞ்சுளாதேவி  வரவேற்றார். முதல்வர் (பொ) சி.குலசேகரன்  முன்னிலை வகித்தார். சர்வதேச வணிகம் துறைத்தலை வர்  செ.பாலமுருகன், முனைவர்.பி.ஜெய சுப்ரமணியன் ஆகியோர் கருத்துரை யாற்றினர். மாணவர்கள் தங்களின் சந்தே கங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். இறுதியாக பேரா.கோவிந்தமணி நன்றி கூறினார்.