அவிநாசி, ஜூலை 11- அவிநாசி பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் நுழையும் தனி யார்பேருந்திற்கு கட்டணம் வசூலிப் பதற்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்தாண்டு ஏலத்தொகை அதிகம் என்பதால் யாரும் ஏலம் எடுக்க முன்வராத தால் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது. அவிநாசி பேரூராட்சியின் வழியாக ஈரோடு, கோவை, திருப்பூர், உதகை, தேனி, பழனி போன்ற ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன. இப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு உள்ளே நுழைவதற்கு பேரூராட்சி சார்பில் கட்டணம் வசூலிப்பதற்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. இந்தாண்டுக் கான ஏலம் வியாழனன்று நடைபெறுவ தாக பேரூராட்சி சார்பில் அறிவிக்கப்பட் டிருந்தது. ஆனால் ஏலத்தொகை அதிக மாக உள்ளதாக கூறி யாரும் ஏலம் எடுக்க வரவில்லை. இதையடுத்து ஏலம் ஒத்திவைக் கப்பட்டதாக தெரிகின்றது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி யிடம் கேட்டபோது, அவிநாசி பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைவதற்கு கட்டணம் வசூலிப்பதற்கு வியாழனன்று ஏலம் நடைபெறுவதாக அறிவித்திருந்தது. ஆனால் ஏலம் எடுப்பதற்கு இருவர் மட்டுமே வந்திருந்தனர். இதனால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது என தெரிவித்தார்.