நிர்ணயித்த காலத்திற்குள் பணிமுடிப்பவர்களுக்கு முறையான ஊக்கத்தொகை வழங்கிடுக
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை
கோவை, மார்ச் 17 - கோவை மாநகராட்சி மற்றும் உள் ளாட்சி நிர்வாகங்கள், ஒப்பந்ததாரர்களுக்கு பணியை முன்கூட்டியே முடித்தால் வழங் கக்கூடிய ஊக்கத்தொகையை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் உதயகுமார் , செயலாளர் சந்திர பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது: கோவை, சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள் ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சி கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் கார்ப்பரேஷனில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டு ஒப்பந்த பணி வழங்கப்ப டுகிறது. சாலை, பாலம், மழைநீர் வடிகால், சாக் கடை கால்வாய் , குடிநீர் குழாய் அமைத்தல் என பல்வேறு பணிகள் உள்ளாட்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய கால அவகாசத்தில் 10 சதவிகித நாட்க ளுக்கு முன்பாக பணிகளை முடித்து விட் டால் அதாவது 100 நாட்களில் முடிக்க வேண்டிய பணிகளை 90 நாட்களில் முடித்து விட்டால் ஒரு சதவிகித ஊக்கத்தொ கையை உள்ளாட்சி நிர்வாகங்கள் சம்பந்தப் பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு இருக்கிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை உட்பட பல்வேறு துறைகளில் திட்ட காலத்திற்கு முன்பாக பணி முடிக்கும் ஒப் பந்த நிறுவனங்களுக்கு ஒரு சதவிகித ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சில அவசர காலப் பணிகளுக்கு ஊக்கத் தொகை அதிகமாகவும் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த நடைமுறையை மாநகராட்சி கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி நிர்வா கங்கள் பின்பற்ற வேண்டும். மேலும் அவ் வாறு ஊக்கத்தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றமும் ஆணை பிறப்பித்துள் ளது. ஆனால், மாநகராட்சியில் திட்டப் பணி களை உரிய காலத்தில் முடிப்பது சவாலாக இருக்கிறது. காலதாமதம் ஏற்பட்டால் அப ராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து இடையூறு, பணி நடக்கும் இடங்களில் ஏற்ப டும் தொந்தரவு, திட்டப்பணி நடக்கும் பொழுது வாகனங்கள் சென்று வருவதால் ஏற்படும் பாதிப்பு போன்றப் பிரச்சனை களை சமாளித்து பணிகளை நடத்த வேண்டி யிருக்கிறது. பணிகள் முடித்த பின்னர் தொகை பெறுவதிலும் காத்திருப்பு நிலை உள்ளது. இருந்தும் இவ்வாறு இடையூறு கள், தொந்தரவுகள் வந்தாலும் சில ஒப்பந்த நிறுவனங்கள் உரிய காலத்திற்கு முன்பாக திட்டப் பணிகளை முடித்து மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து வருகிறது. அது போன்ற நிறுவனங்கள் தகுதி இருந்தும் ஒரு சதவிகித ஊக்கத்தொகை பெற முடியாமல் தவிக்கும் நிலை இருக்கிறது. எனவே, கோவை மாநகராட்சி உட்பட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வா கங்கள் ஊக்கத்தொகையை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு செய்தால் ஒப்பந்த நிறுவனங்கள் மக்க ளுக்கான பணிகளை சிறப்பாக செய்ய முடி யும் என தெரிவித்துள்ளனர்.
பவானிசாகர் அணை முன்பு புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
பவானி, மார்ச் 17- பவானிசாகர் அணையின் முன்பாக உள்ள பாலம் பழுத டைந்த நிலையில் பவானி ஆற் றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையின் முன்பாக 70 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. அணை கட்டிய பின் பல வருடங்களாக இப்பாலம் வழியாக போக்குவரத்து நடை பெற்று வந்தது. இந்நிலையில், இந்த பாலம் நாளடைவில் பழு தடைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் நடுவே 2 இடங் களில் விரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட் டது. இதன்காரணமாக புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, கொத்தமங்கலம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம், சுஜில்குட்டை, நந்திபுரம், தெங்குமரஹாடா, கல் லம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்களுக்கிடை யேயான போக்குவரத்து துண்டிக் கப்பட்டது. இந்நிலையில் பழுத டைந்த பாலத்திற்கு பதிலாக அதன் அருகே புதிய பாலம் கட்ட ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந் தம் விடப்பட்டது. இதைத்தொ டர்ந்து தற்போது பழுதடைந்த பாலத்திற்கு வடக்குப்பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.