ஜன.8 வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முறைசாரா தொழிற்சங்கங்கள் முடிவு
திருப்பூர், டிச. 5 – கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நலவாரியங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல் வதை எதிர்த்தும், நல வாரிய நிதியில் பல்லாயிரம் தொழிலாளர் கோரிக் கைகள் கேட்பாரற்று இருக்கும் நிலையில், அந்த நிதியை அம்மா உணவகங்களுக்கு பயன்படுத்து வதைக் கைவிட வலியுறுத்தியும் ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பங் கேற்பதென முறைசாராத் தொழி லாளர் சங்கங்கள் முடிவு செய்துள் ளன. திருப்பூர் சிஐடியு அலுவல கத்தில் புதனன்று தமிழ்நாடு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் டி.குமார் தலை மையில் முறைசாரா மற்றும் கட்டு மானத் தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலையோர வியா பாரிகள் சங்கச் செயலாளர் பி. பாலன், சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சதாசிவம், பாத்திரத் தொழிலாளர் சங்கப் பொருளாளர் குபேந்திரன், முருக சாமி, ஏஐடியுசி செயலாளர் ஜெக நாதன், ஐஎன்டியுசி முறைசாரா தொழிலாளர் சங்கச் செயலாளர் அ.சிவசாமி, எல்பிஎப் முறைசாராத் தொழிலாளர் சங்க நிர்வாகி ரங்க சாமி, எச்எம்எஸ் செயலாளர் ரங்க சாமி உள்பட பல்வேறு முறைசாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கட்டுமானம் மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்காக உருவாக் கப்பட்ட நலவாரியங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்வதை எதிர்த்தும், நலவாரிய நிதியை அம்மா உணவகங்களுக்கு பயன்படுத்துவதை கைவிட்டு, அரசு நிதி வழங்கி அத்திட்டத்தை நடை முறைப்படுத்தவும், பல ஆயிரம் மனுக்கள் நலவாரிய பயன்கள் கேட்டு விண்ணப்பித்தவை நிலுவை யில் இருப்பதை உடனடியாக ஏற்று பணஆணை வழங்கவும் வலியுறுத் தப்பட்டது.
தொழிலாளர் சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாத கமாக திருத்தி சட்டமாக்கியதை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக் கூடாது. கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தை வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி ஜனவரி 8ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 8 வேலைநிறுத்தத்தில் முறைசாரா தொழிலாளர்களை முழுமையாகப் பங்கேற்கச் செய்வ தற்காக டிசம்பர் 16ஆம் தேதி அனைத்து முறைசாரா தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட் டத்தை சிஐடியு அலுவலகத்தில் நடத்துவது, மாவட்டம் முழுவதும் கட்டுமானம், சுமைப்பணி, பாத்திரம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர் மையங்களில் துண்ட றிக்கை விநியோகம் செய்வது, ஜனவரி 4, 5, 6 தேதிகளில் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் கூடுமிடங் களிலும், கட்டுமானத் தொழிலாளர் கூலி முக்குகளிலும் பிரச்சாரக் கூட்டம் நடத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர் களைப் பங்கேற்கச் செய்து முழு வெற்றி பெறச் செய்வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.