கோவை, ஆக.30- பயணி ஒருவர் தவறவிட்டு சென்ற 37 ஆயிரம் ரூபாய் பணத்தை அரசு போக்குவரத்து கிளையில் ஒப்படைத்த நடத்துனர் மற்றும் ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி கழக அதிகாரிகள் கௌரவித்தனர். அரசு போக்குவரத்து கழக பவானி கிளை நகர 2பி பேருந்தில் நடத்துனராக பி.ஆறுமுகமும், ஓட்டுநராக எஸ்.சீனிவாசனும் பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில் வியாழனன்று பவானியில் இருந்து வள்ளி புரத்தாம்பாளையம் செல்லுகையில் பயணி ஒருவர் ரூ.37 ஆயிரத்தை பேருந்தில் தவறவிட்டு சென்றுள்ளார். இதனை யடுத்து அந்த பணத்தை உரியவர்களிடம் சேர வேண்டும் என்பதற்காக நடத்துனர் மற்றும ஓட்டுநர் இருவரும் பவானி கிளை அலுவலகத்தில் அந்த பணத்தை ஒப்ப டைத்தனர். இத்தொழிலாளிகளின் நேர்மையை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிதி அலுவலர், பொதுமேலாளர் ஆகியோர் பாராட்டி பரிசளித்து கௌரவித்தனர்.