tamilnadu

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை, அக். 23–  கோவை க.க.சாவடி சோதனை சாவடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனை யில், கணக்கில் வராத பணம் கைப் பற்றப்பட்டது. இதனையடுத்து வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை பாலக்காடு சாலை, க.க.சாவடி அருகே, கோவைப்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்துக்கு சொந்தமான சோதனைச் சாவடி அலுவலகம் உள்ளது. கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் வெள்ளியன்று அதிகாலை 5 மணிக்கு சென்று, மோட்டார் வாகன ஆய்வாள அறை, ஊழியர்கள் அறை உள்ளிட்ட ஒவ்வொரு அறைகளிலும் சோதனை செய்தனர்.

இதனால் அதிர்ச்சிய டைந்த ஊழியர்கள் சிலர் தங்களிடம் இருந்த கணக்கில் வராத தொகையை சன்னல் வழியே வெளியே வீசினர். அதைக் கண்ட போலீசார் அந்த தொகையை பறிமுதல் செய்தனர். மேலும், அலுவலகத்தில் கோப்பு கள் வைக்கும் அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, ஊழியர்களி டம் என பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் ரூ.91 ஆயிரம் கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப்பட் டது.

இந்த தொகைக்குண்டான கார ணத்தை அங்கிருந்த ஊழியர்களால் சரிவர கணக்கு காட்ட முடியவில்லை. இதன்பின் மேற்கொண்ட விசாரணை யில், அவ்வழியாக வந்து செல்லும் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களிடம் பெற்ற லஞ்சத் தொகை அது என்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சோதனையில் கணக்கில் வராத தொகை கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மோட்டார் வாகன ஆய் வாளர் சரோஜா, உதவியாளர், அலுவ லக உதவியாளர் என 3 அரசு ஊழியர்க ளும், மோட்டார் வாகன ஆய்வாள ரால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஒருவர் என மொத்தம் 4 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.