tamilnadu

img

25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

ஏற்காடு, பிப்.21- ஏற்காட்டில், 25 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் வெள்ளியன்று சந்தித்த நிகழ்வு நடை பெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காடு புனித ஜோசப் பள்ளியில்  1995 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளியன்று சந்தித்துக் கொண்டனர். இவர்கள், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து ஒண்டிக்கடை பகுதியில் இருந்து பேருந்து நிலையம்,  கடைவீதி, காவல் நிலையம், ஜெரினாக்காடு, முருகன் நகர்  பகுதி வழியாக இருசக்கர பேரணியாக பள்ளிக்கு வந்த டைந்தனர். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு  வைத்தனர். மேலும் தங்களின் முன்னாள் ஆசிரியர் களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கியும்  கவுரவித்தனர். பின்னர் தங்கள் பழைய நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.