tamilnadu

வனப்பகுதியில் அமைக்கப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்

கோவை, ஜூன் 11-  வனப்பகுதிக்கு அருகில் கட்டப்படும் குடிசை மாற்று  வாரிய வீடுகளால், யானைகள் ஊருக்குள் புகும் ஆபத்து இருப்பதாகக் கூறி கட்டுமானப் பணிகளை நிறுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கோவையை அடுத்த ஆலாந்துறை பகுதியில் உள்ள காளிமங்கலம் வனப்பகுதியை ஒட்டிய பகுதியாகும். இங்கு அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தங்கள் கிராமத்திற்கு அருகில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் 600 வீடுகளில் சுமார் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் குடியமர்த்தப்பட உள்ளனர்.  ஏற்கனவே, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள  இப்பகுதியில் கூடுதலாக ஆயிரக்கணக்கான மக்கள் குடிய மர்த்தப்பட்டால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தங்களுடன் சேர்த்து புதிதாக குடிய மர்த்தப்படும் மக்களும் யானை தாக்குதலுக்கு உள் ளாகும் வாய்ப்புள்ளது. எனவே, குடியிருப்பு கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி வேறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.