தாராபுரம், ஜூலை 4 – தாராபுரத்தில் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில், மாவட்ட ஆதிதிராவிட நலத் துறை அலுவலர் புதனன்று திடீர் ஆய்வை மேற்கொண்டார். தாராபுரம் பார்க் ரோட்டில் உள்ள அர சினர் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி யில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் மகாராஜன் திடீர் ஆய்வு மேற் கொண்டார். இதில் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு உணவுகள் முறையாக வழங்கப்படுவதையும், அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தார். இதைத்தொடர்ந்து சுகா தாரமான முறையில் உணவுகளை தயாரிக்க வேண்டும்.விடுதியை முறையாக பராமரிக்கவேண்டுமென அறிவுறுத் தினார்.