நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கம் மனு
எடப்பாடி, மார்ச் 13- தமிழக நெடுஞ்சாலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுமாறு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் எடப்பாடி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் வியாழனன்று மனு அளித்தனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப் பட்டு வரும் மாநில சாலைகள், மாவட்டத்தின் முக்கிய சாலைகள் பராமரிப்பை பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை எடப்பாடி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகி கலைவாணன் அந்தோணி ஆகியோர் பங்கேற் றனர்.