திருப்பூர், மே 8 – திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கவுண்டச்சிபுதூர் ஊராட் சியில் குறவர் இன பெண் ஊராட்சி மன்றத் தலைவரை சாதிய வன்மத் தோடு ஆபாசமாக திட்டி அவமானப் படுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய சாதி ஆதிக்க ஊராட்சி வார்டு உறுப்பினர் மீது வன்கொ டுமைத் தடுப்புச் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக் கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கவுண்டச்சிபுதூர் ஊராட் சியில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.செல்வி (வயது 33) ஊராட்சிமன்றத் தலைவராக இருக்கிறார். இவரது கணவர் வி.ரமேஷ் மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தாழ்த்தப்பட்ட இந்து குற வன் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த மே 4ஆம் தேதி கவுண் டச்சிபுதூர் ஊராட்சிமன்ற அலுவ லகத்தில் செல்வி ஊராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்க ளுக்கு சீருடை மற்றும் சத்து மாத்தி ரைகள் வழங்குவது பற்றிய பணி யில் வார்டு உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது, ஆறாவது வார்டு ஊராட்சிமன்ற உறுப்பினர் எஸ்.குப்புசாமி என்பவர் அங்கே வந்து தலைவர் செல்வியிடம் சீருடை வழங்குவது பற்றி ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று தகராறில் ஈடுபட்டார். இதற்கு செல்வி பதில் கூறியபோதும் அதைக் கேட்காமல் தாழ்த்தப்பட்ட குறவன் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் வேண்டு மென்றே உள்நோக்கத்துடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் வைத்து அவமானப்படுத்தினார். பலர் முன்னிலையில் ஆபாசமாகப் பேசி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆவேசமாக கொலை வெறியோடு செல்வியை அடிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த வர்கள் அவரிடமிருந்து ஊராட்சித் தலைவர் செல்வியைக் காப்பாற்றி உள்ளனர். இதனால் மிகுந்த அவமானத் துடன் அழுது கொண்டே அவர் அலு வலகத்தை விட்டு வெளியேறிச் சென்றார். இது குறித்து, தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித் தும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை எனக் கூறப்படுகிறது. இந் நிலையில், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிமன்றத் தலைவர் செல்வி, தனது கணவர் ரமேஷுடன் வியாழக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயனிடமும், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் திஷா மிட்டலிடமும் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமைத் தடுப் புச் சட்டப்படி குற்றம் புரிந்த குப்பு சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அவர் கேட்டுக் கொண் டிருக்கிறார். இதேபோல், தாழ்த்தப்பட்ட குற வன் சாதி பெண் ஊராட்சித் தலைவர் செல்வி மீது சாதிய வன்மத்துடன் ஆபாசமாக இழிவுபடுத்திப் பேசி அவமானப்படுத்தியதுடன், கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்க முயன்ற குப்புசாமி மீது காவல் துறை, அரசு நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என். கனகராஜ் தாராபுரம் சார் ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு அளித்துள் ளார். இதைத்தொடர்ந்து எஸ். குப்புசாமி மீது தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.