tamilnadu

img

கேரளத்தில் பருவ மழை வலுவடைந்தது

கொச்சி, ஜுலை 22- கேரளா முழுவதும் பருவமழை பரவலாக பெய்துவரும் நிலையில் சில மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதன்படி கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங் களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம் நகரசபை மற்றுமுள்ள சில பகுதிகளில் தொழிற்கல்வி தவிர மற்ற கல்வி நிறுவனங்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் கண்ணூர் பல்கலைக் கழக தேர்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. திருவனந்தபுரத்தில் நிவாரண  முகாம்கள் செயல்படும் பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் அங்கன்வாடிகளும் கேந்திரிய வித்யாலயங்களும் விடுப்பு அறிவித்து ள்ளன. மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட மாஹியில் திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.