tamilnadu

img

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று  அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம் என்று  கூறியுள்ளார்.
மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை கேரள அரசே ஏற்கும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.