கொரோனா பெருந்தொற்றை கண்டறியும் ரேபிட் பரிசோதனையில் நல்ல முடிவுகள் வந்துக் கொண்டிருக்கிறது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மாநில அரசு 20000 கோடி செலவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் சமூக பரவல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால், பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிந்து கொள்ள ரேபிட் பரிசோதனை நடத்த கேரளாவுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்தது.
இந்நிலையில், ரேபிட் பரிசோதனையில் நடத்தப்படும் தனிமைப்படுத்துதல், சோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை மூலம் நல்ல முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஒருவருக்கு பரிசோதனை நடத்தினால் 10 முதல் 30 நிமிடங்களுக்குள் முடிவு தெரிந்து விடுகிறது என கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் இதுவரை 9 ஆய்வகங்களில் 8000க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார்.