ஜம்மு-காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரர் அனீஷ் தாமஸ் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ராணுவ வீரர் அனீஷ் தாமஸின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, துக்கமடைந்த குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் அனீஷ் தாமஸின் உயிரிழந்துளார்.
கொல்லம் மாவட்டத்தில் அலுமுக் நகரைச் சேர்ந்த அனீஷ் தாமஸ் (36) என்பவரின் மறைவுக்கு பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார், என்று முதல்வர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த அனீஷ் தாமஸின் உடல் வியாழக்கிழமை கேரளாவிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தை உள்ளார்.