tamilnadu

கேரளத்தில் ஒரே நாளில் 702 பேருக்கு கோவிட் : தொடர்பு தொற்று 483; குணமடைந்தது 745 பேர்

திருவனந்தபுரம், ஜுலை 28-  கேரளத்தில் திங்களன்று 702 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதல் 75 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 91 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த வர்கள். தொடர்பு மூலம் 483 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதில் 35 பேருக்கு நோய் தொற்றிடம் தெரிய வில்லை. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 745 பேர் திங்களன்று குணமடைந்தனர். இதுவரை 19,727 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 10,049 பேர் குணமடைந் துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் திங்களன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: கேரளம் முழுவதும் பல்வேறு மருத்துவமனை களில் தற்போது 9609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 2 பேர் மரணமடைந்தனர். திருவனந்தபுரம் மாவட்டத் தில்தான் மிக அதிகமாக 161 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 திங்களன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 43 பேருக்கு நோய் தொற்றியுள்ளது. கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் 1,55,148 பேர் கண்காணிப்பில் உள்ள னர். இதில் 1,45,751 பேர் வீடுகளிலும், 9,397 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். திங்களன்று நோய் அறிகுறிகளுடன் 1,237 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18, 417 பரிசோதனைகள் நடத்தப் பட்டுள்ளன. இதுவரை 3,54,480 பரிசோதனைகள் நடத்தப் பட்டுள்ளன. இதில் 3,842 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இது தவிர சுகாதாரத் துறையினர்,வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள முன்னு ரிமை பிரிவினரில் 1,14,832 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனை யில் 1,11,105 பேருக்கு நோய் இல்லை என்று தெரிய வந்துள் ளது. தற்போது 495 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.