tamilnadu

மத்திய அரசின் உதவி வெறும் வாக்குறுதி மக்களின் இழப்பில் நெருக்கடியை கடக்க முயற்சி

திருவனந்தபுரம், மே 17- மத்திய அரசின் சிறப்புத் திட்ட அறிவிப்பு ஒவ்வொரு கட்டத்தை கடக்கும்போதும் மேலும் மேலும் கேலிக்கூத்தாகி வருகிறது. மெதுவாக கொள்கைகளின் உண்மையான நிறம் வெளிவருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணப்போவதில்லை. மக்களின் இழப்பில் நெருக்கடியை சமாளிப்பதே இந்த நடவடிக்கை. அதே நேரத்தில், அவர்களது கைகளில் பணம் ஒப்படைக்கும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.  உண்மையில் அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கல் நடக்கும் என்று மத்திய நிதியமைச்சர் கூறுகிறார். பொது சுகாதார அமைப்பின் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தபோதிலும், மத்திய அரசு எதற்கும் திட்டமிடவில்லை. மாறாக அது கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வலைப்பின்னல் உருவாவதை ஆதரிக்கிறது. சாமானியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் எந்தவித தலையீடும் இல்லாத- நன்மை செய்யும் சிந்தையும் இல்லாமல் மத்திய அரசு உள்ளது.  இந்தியாவின் பொது சொத்து கோவிட்டின் திரைமறைவில் விற்றுத் தெலைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய நிதி அமைச்சரின் வாதங்கள் விசித்திரமானது. இதுவரை மாநிலங்களுக்கு என்ன தருவோம் என்று கூறவில்லை  என தாமஸ் ஐசக் தெரிவித்தார்.