திருவனந்தபுரம்:
போலி செய்திகளை வெளியிட்டதற்காக மலையாள மனோரமாவுக்கு எதிராக தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராமனின் மனைவி பி.கே.இந்திராபிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் புகார் அளித்தார்.கோவிட்- தனிமைப்படுத்தலை மீறி வங்கி லாக்கரை திறந்ததாகவும், பரிவர்த்தனை மர்மமானது என்றும் குற்றம் சாட்டி, 2020 செப்டம்பர் 14, அன்று செய்தித்தாள் மற்றும் ஆன் லைன் பதிப்பில் வெளியிடப்பட்ட மனோரமா செய்திகளுக்கு எதிராக இந்த புகார்உள்ளது. மலையாள மனோரமா வெளி
யீட்டாளர் ஜேக்கப் மேத்யூ, தலைமை ஆசிரியர் மாமன் மேத்யூ, நிர்வாக ஆசிரியர் ஜேக்கப் மேத்யூ மற்றும் நிருபர் கே.பி. சபீனா ஆகியோர் மீது இந்த புகாரை பதிவு செய்துள்ளார்.தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவமதிக்கும் வகையில் அந்த செய்தி இருந்தது என புகாரில் இந்திராதெரிவித்துள்ளார்.
செய்தி தவறான கருத்துக்களை பரப்புகிறது. வாசகர்களிடையே தேவையற்ற சந்தேகங் களை எழுப்புகிறது. கோவிட் நோயாளிகளுடன் தான் ஒருபோதும் நேரடி தொடர்பில் இருந்ததில்லை என்பதால்தனிமைப்படுத்தலில் இருந்ததில்லை. எனவே, தனிமைப்படுத்தல் மீறப்பட் டுள்ளது என்ற செய்தி ஆதாரமற்றது. கோவிட் தனிமைப்படுத்தலை வேண்டுமென்றே தவிர்த்து நெறிமுறையை மீறியதாக செய்தித்தாள் காட்ட முயன்றது. இது தவறான நோக்கத்துடன் வெளியிட்டதாகும். செய்தியாளரோ ஊடக நிறுவனமோ தன்னை தொடர்புகொண்டு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது இந்திய பத்திரிகை கவுன்சிலின் ஊடக விதிகளுக்குஎதிரானது என்று புகாரில் கூறப்பட் டுள்ளது.வங்கி லாக்கரைத் திறந்தது, தங்கக்கடத்தல் வழக்குடன் தொடர்புடையது எனவும் மத்திய விசாரணை நிறுவனம் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் வெளியான செய்தி பொய்யானது. செய்திகளை இட்டுக்கட்டியதன் மூலம் தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவமதிக்கும் ஒரு முயற்சிஅது. தங்கக் கடத்தல் வழக்குடன்மாநில அமைச்சர்கள் சம்பந்தப்பட்டதாக அந்த நாட்களில் தொடர்ந்து செய்திகள் வந்தன. தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இந்த செய்திகள் பத்திரிகைகளின் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் முழு அறிவையும் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. எனவே, செய்தியை எழுதிய நிருபர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதற்கு பொறுப்பாளிகள்.
“ மர்மமான ஒப்பந்தம்” என்ற செய்தியின் தலைப்பு தீங்கிழைக்கும் நோக்கம்கொண்டது. தலைப்புடன் தொடர் புள்ள விவரம் ஏதும் செய்திகளில் தெரிவிக்கப்படவில்லை. செய்தி தவறானது என்ற முழு நம்பிக்கையுடன் தன்னையும் குடும்பத்தினரையும் அவமானப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. செய்தித்தாளின் பிரபலத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம். செய்திவெளியானதைத் தொடர்ந்து, தனக்கும்தனது குடும்பத்தினருக்கும் எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் நடைபெற்றது. சமூக ஊடகங்களில் உட்படவெறுப்பு பிரச்சாரம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நிறுவனம் மற்றும் நிருபருக்கு தவறான செய்திகளை திரும்பப்பெறுமாறு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, ஆனால் இதுவரை எந்தவிதமான நேர்மறையான பதிலும் வரவில்லை என்று புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் இன்னமும் அந்தசெய்திக்கு மன்னிப்பு கேட்கவில்லை. ஆன்லைன் பதிப்பிலிருந்து அந்த செய்திகளை திரும்பப் பெறவில்லை. தவறான செய்திகளுக்கு மன்னிப்பு கேட்கவும், செய்திகளை திரும்பப் பெறநடவடிக்கை எடுக்கவும் புகாரில் கோரப்பட்டுள்ளது.