திருவனந்தபுரம், ஜூன் 25- கேரளத்தில் ஞாயிறன்று 152 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 98 பேர் வெளிநாடு களில் இருந்தும் 46 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேர ளத்துக்கு வந்தவர்கள். புதனன்று 4941 நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 3603 பேருக்கு இதுவரை கோவிட் நோய் தொற்று ஏற்பட்டது. தற்போது 1691 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,54,759 பேர் கண்கா ணிப்பில் உள்ளனர். இதில் 2282 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். புதனன்று மட்டும் 288 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 1,48,827 மாதிரிகள் பரி சோதனை செய்யப்பட்டன. 4005 பேரது பரிசோதனை முடிவு கள் நிலுவையில் உள்ளன. முன்னுரிமை பிரிவினரில் 40,537 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 39,113 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டன.