கிருஷ்ணகிரி, ஆக. 31- கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 8வது வட்ட மாக அஞ்செட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இங்குள்ள நாட்றாம்பாளயம் ஊராட்சி தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது. கோம்பைத் காடு, லூர்து நகர், சேவியர் கோட்டை, குழந்தை ஏசு நகர், ஆரோக்கியபுரம், கவுண்ட னூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சிறு சிறு குடியிருப்புகளில் சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். காவிரி ஆற்றின் கிழக்கு கரை யிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மலைகள், வனங்கள் சூழ்ந்தது இந்த பகுதி. மேலும் ஒகேனகல் அருவியிலிருந்து 14 கிலோ மீட்டரில் உள்ளது. இந்த கிராமங்களுக்கு குடிநீருக்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், குழாய்க ளும், ஆழ்துளை கிணறும் பழுதானது. இதை யடுத்து ஆரோக்கியபுரத்தில் புதிதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி 4ஆவது நிதிக் குழு மானியத் திட்டம் 2017-18இல் 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட் டது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் காட்சிப் பொரு ளாக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக பக்கத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தண்ணீர் எடுத்து வந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு அங்கும் தண்ணீர் எடுக்க அனு மதிக்கவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அலையவேண்டிய நிலை உள்ளது. மேலும் ரேசன் வாங்கவும், அரசுப் பள்ளிக்கும், ஆரம்ப சுகாதார நிலையத் திற்கும், ஊராட்சி அலுவலகத்திற்கும், நகரப் பேருந்துக்கும் நாட்றாம்பாளையம் வரை 4 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டி யுள்ளது. மழைக் காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. இங்குள்ள வீடுகள் அனைத்தும் 25 ஆண்டு களுக்கு முன்பு மண் சுவற்றால் கட்டப்பட்டு, இடியும் நிலையில் உள்ள ஓடு வீடுகள் ஆகும். மக்களுக்கு அரசின் உதவி வேண்டி பலமுறை தளி, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர்கள், ஓசூர் சாராட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேல்நிலை நீர்தேக்க தொட்டியை உடனடி யாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், 4 கிலோ மீட்டர் பாதையை தார் சாலையாக மாற்றி நகர பேருந்துகளை இயக்க வேண்டும், ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகள், ஆரம்ப சுகாதார நிலை யம், பகுதி நேர ரேசன் கடை கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளனர்.