கிருஷ்ணகிரி, ஜூலை 13-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலமங்கலம் சாலையில் முகளூர் ஊராட்சி ஜெ.காருப்பள்ளியில் 100 வீடுகளும், அதன் அருகில் 15 வீடுகளும் உள்ளது.
இந்த குடியிருப்புகளை ஒட்டி கூட்டூர் உள்ளிட்ட 3 ஊராட்சிகளின் மக்களுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. தற்போது, இங்கு வீடுகள் மத்தியில் புதிதாக டாஸ்மாக் கடை துவங்க கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கிறது. இதையடுத்து, அரசு அதிகாரிகள், டாஸ்மாக் நிர்வாகிகள் ஆகியோரிடம் கிராம மக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து, கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் திம்மாரெட்டி தலைமையில் ஓசூர் பொறுப்பு சாராட்சியர் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகரச் செயலாளர் சி.பி. ஜெய ராமன் செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்த குமார், விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் ஜி ஜி.கோவிந்தப்பா, சீனிவாசன், கல்பனா ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.