அனைத்து கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மேட்டுபாளையம், நவ. 30- மேட்டுப்பாளையம் பவானி யாற்றில் இருந்து மூன்றாம் மற்றும் நான்காம் குடிநீர் திட்டத்திற்கு தண் ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் பவானியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணை மற்றும் பவானி நதியின் நீரை ஆதாரமாக கொண்டு 16 குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.இந்த குடிநீர் திட்டங்க ளுக்காக தினசரி 59.70 கோடி லிட் டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகி றது.இந்நிலையில், கோவை மாநக ராட்சி மூன்றாவது குடிநீர் திட்டத்திற்காக மேட்டுப்பாளை யத்தில் உள்ள பவானியாற்றில் இருந்து தினசரி 290 மில்லியன் லிட் டருக்கு அதிகளவு தண்ணீரும், திருப்பூர் மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையிலான நான்காவது குடிநீர் திட்டத்திற்கு தினசரி 190 மில்லியன் லிட்டருக்கு மேற்பட்ட தண்ணீரும் எடுக்க திட் டமிடப்பட்டுள்ளது. அதற்கான குழாய் பாதிக்கும் பணிகள் துவங்கி யுள்ளன. இந்நிலையில் மேட்டுப்பாளை யத்தில் ஏற்கனவே பதினாறு குடி நீர் திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால், புதிதாக கொண்டுவரப்பட்ட திட்டங்களுக் காக கூடுதல் நீரை எடுக்கும் பட்சத் தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப டும்.மேலும், ஏற்கனவே செயல்பாட் டில் உள்ள திட்டங்களும் முடங்கும் என புகார் எழுந்துள்ளது. இதனை தமிழக அரசுக்கு வலியுறுத்தும் வகையில் வெள்ளியன்று மாலை மேட்டுப்பாளையத்தில் அனைத்து கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட் டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்பாட் டத்திற்கு பவானி நதி நீர் பாது காப்பு குழுத்தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப் பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப் புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண் டனர்.