மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்டினை மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஜெயராஜமூர்த்தி திறந்து வைத்தார். குடவாசல் மற்றும் வலங்கைமான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஒவ்வொரு இடத்திலும் ரூ ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் பிளான்டினை மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஜெயராஜமூர்த்தி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி முதன்மைப் பொது மேலாளர் மாறன், சமூகப் பொறுப்புணர்வு திட்ட அதிகாரி உஷாபிரபாகர் அலுவலர்கள் அன்பரசு, முருகானந்தம், கார்த்திகேயன், அரசு மருத்து வர்கள் முத்துசாமி, சித்ரா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.