கிருஷ்ணகிரி, ஜூன் 24- 1969ஆம் ஆண்டு தேர்வு நிலை ஊராட்சி யாக இருந்த ஓசூர் 98-ல் தேர்வு நிலை நகராட்சி யாகவும், 2011-ல் சிறப்பு நிலை நகராட்சி யாகவும், 2019 பிப்ரவரியில் மாநகராட்சி யாகவும் மாற்றமடைந்தது. 1979க்குப் பிறகு 1540 ஏக்கரில் உருவான ஓசூர் சிப்காட் 1, 2, மற்றும் அதையொட்டி தனி யார் லே அவுட் தொழிற்பேட்டைகள் என விரி வடைந்தது. இதையடுத்து அரசின் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளும், தனியார் குடி யிருப்புகளும் பெருகின. 22 ஆண்டுகளுக்கு முன்பு 20 சதுர கி.மீ. பரப்பளவில்16 வார்டாக இருந்த நகராட்சி யில் 175 தூய்மைப் பணியாளர்கள் இருந்தனர். தற்போது 200 சதுர கி.மீ. பரப்பில் 15 கிலோ மீட்டர் குறுக்களவில் 4.9 லட்சம் மக்கள் தொகையுடன் 62 வார்டாக மாறியுள்ளது.
ஆனால் அதற்கேற்ப சுகாதார, தூய்மைப் பணி யாளர்களின் எண்ணிக்கை உயரவில்லை. தற்போது நிரந்தர தொழிலாளர்கள்ர் 165 பேர் மட்டுமே உள்ளனர். ஒப்பந்த தாரர் மூலம் 350 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 5 லட்சம் மக்கள் தொகைக்கு 500 தூய்மைப் பணியாளர்கள் என்பது யானை பசிக்கு சோளப்பொறி போல் உள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஸ்ரீதர், தலைவர் நஞ்சுண்டன், பொரு ளாளர் பீட்டர் துப்புரவு பணியாளர்கள் சங்க தலைவர் சிவா, செயலாளர் விஜயன், பொரு ளாளர் சுரேஷ் ஆகியோர் கூறுகையில், ஓசூர் மாநகராட்சியில் மக்கள் தொகைக்கும், பரப்பளவிற்கும், விரிவாக்கத்திற்கும் ஏற்ப தூய்மைப் பணியாளர்களை 5 மடங்கு உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய உபகரணங்கள், முறையான ஊதியம் வழங்க வேண்டும், இலவச மருத்துவக் காப்பீட்டு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.