கிருஷ்ணகிரி,பிப்.12- 14 பள்ளி மாணவிக்கு குழந்தை திருமணம் நடந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்குக் குழந்தை திருமணம். சிறுமியைத் திருமணம் செய்த நபர், குழந்தையின் பெற்றோர் உட்பட 5 பேர் கைது.
பள்ளிக்குத் தாலியுடன் வந்த சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திற்குத் தகவல் அளித்ததின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.