சர்வதேச டி-20 கிரிக்கெட்
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேபாளம், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் சிங்கப்பூர் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஞாயிறன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிங்கப்பூர் அணி 18 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் (மழை காரணமாக ஓவர் குறைப்பு) குவித்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தி யாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது. இந்தியா உள்ளிட்ட தலைசிறந்த அணி களை வீழ்த்திய அபாயகரமான அணியான ஜிம்பாப்வே அணி, சர்வதேச கிரிக்கெட்டில் முழுநேர உறுப்பினர் அந்தஸ்து பெறாத சிங்கப்பூர் அணியிடம் வீழ்ந்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படு த்தியுள்ளது. இருப்பினும் ஜிம்பாப்வே அணிக்கு நிர்வாக பிரச்சனை அதிகம் உள் ளது. அணி நிர்வாகத்தில் அரசியல் தலை யீடு இருப்பதாகக் கூறி ஐசிசி சில மாதங் களுக்கு முன்பு தடை விதித்தது என்பது குறிப் பிடத்தக்கது.