சண்டிகர், செப்.15- அரியானாவில் தொடங் கப்பட உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப் டன் கபில் தேவ் நியமிக்கப் பட்டுள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய இரு மாநி லங்களில் மட்டுமே விளை யாட்டுக்கு என தனி பல்க லைக்கழகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதற்கிடையில், அரி யானா மாநிலத்தில் இளை ஞர்களிடையே விளை யாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுத் துறைக்கென தனி பல்க லைக்கழகம் நிறுவுவதற்கான அனுமதியை கடந்த ஜூலை மாதம் அம்மாநில அரசு வழங்கியது. இந்நிலையில், அரி யானாவின் சோனேபட் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள மாநில விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நிய மிக்கப்படுவார் என அம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரி வித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை யை முதன்முறையாக வென்ற இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் இருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.