கொரோனா வைரசை கட்டுப்படுத்த 22 மருந்துகளை கியூபா மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர்.
உலகின் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த நோய் தொற்றால் இதுவரை 2,04,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 8,156 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனை மனிதர்களுக்கு சோதனை நடத்த உள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் கியூபா நாட்டில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 22 மருந்துகளை, அந்நாட்டு மருத்துவர்கள் ஏற்கனவே உருவாக்கி உள்ளனர்.
இந்த 22 மருந்துகளில் ஒன்று ஆல்ஃபா 2 பி. இந்த மருந்தை பயன்படுத்தியதில் கியூபா மற்றும் சீனா ஆகிய அரசுகளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் படி 1986-ல் கண்டுபிடிக்கபட்ட இண்டர்ஃபெரான் பி என்னும் மருந்தை நவீனப்படுத்தி, இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2பி என பெயரிடப்பட்டுள்ள ஒரு மருந்தை சீனாவின் சோதித்தபோது, நோய் தொற்றை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்ததாக சீனாவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இது குறித்து கியூபாவின் பயோகியூபா ஃபார்மா குழுமத்தின் நிர்வாக தலைவர் எட்வர்டோ மார்டினெஸ் கூறுகையில், ”கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த 22 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். முன்னதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொவிட்-19 நோயாளிகளை குணமடைந்துள்ளனர். இந்த மருந்துகளின் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க நாங்கள் தயாராகி வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.