tamilnadu

img

ஐஎஸ்எல்  சென்னை அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமனம்


ஐபிஎல் போட்டியைப் போன்று கால்பந்திலும் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஐஎஸ்எல் (ISL - இந்தியன் சூப்பா் லீக்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் பெற்று நட்சத்திர அணியாக வலம் வரும் சென்னையின் எப்.சி. அணி நடப்பாண்டு சீசனில் கடுமையாகத் திணறி வருகிறது.   இதற்குப் பயிற்சியாளரின் செயல்பாடு தான் காரணம் எனக் கூறி 2017-ஆம் ஆண்டு சீசனில் சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்த ஜான் கிரகோரியை (இங்கிலாந்து) சென்னை அணி நிர்வாகம் நீக்கியது. இந்நிலையில், புதிய பயிற்சியாளராக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓவன் கொய்லே (53 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டு சீசன் முடியும் வரை ஓவன்  பயிற்சியாளராகத் தொடர்வார் என சென்னை அணி நிர்வாகம் கூறியுள்ளது.  

உரிமையாளர்கள்?
ஐஎஸ்எல் தொடரின் முக்கிய அணியான சென்னை அணியின் உரிமையாளர்களாக 3 பேர் உள்ளனர். 1. அபிஷேக் பச்சன் (நடிகர்-பாலிவுட்) 2. தோனி (இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்) 3. வீட்டா தானி (பெண் - விளையாட்டு தொழிலதிபர்). இவர்கள் 3 பேரும் சென்னை அணியைக் கவனித்து வருகிறார்கள். அபிஷேக் படத்தில் நடிக்க அடிக்கடி சென்று விடுவார். தோனி கிரிக்கெட்டில் அதிக நேரம் கவனம் செலுத்தும் நிலையில், சென்னை அணி நிர்வாகம் பெரும்பாலும் வீட்டா தானியின் கையில் தான் சுழலும்.