tamilnadu

img

ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி, வரும் மார்ச் 24-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. அதே சமயம், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 4,200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 1,19,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 62 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை வரும் 29-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.