tamilnadu

ஆண் குழந்தை மீட்பு

 செங்கல்பட்டு, அக்.31-  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் புதனன்று (அக்.30) இரவு மின்சார ரயிலில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது   பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள்  மின்சார ரயிலில் ஏறி சோதனை செய்தபோது, ஒரு பையில் பிறந்து ஒரு சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. காவல்துறையினர் உடனே குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு, குழந்தைக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குழந்தையை மின்சார ரயிலில் வீசி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.