காஞ்சிபுரம், மார்ச் 10- மார்ச் 20 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற விருப்பதாக மாவட்ட ஆட்சியர் பா.பென்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டத்தின் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மார்ச் 20 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பொது மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் தலைமையில் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வேளாண் துறை மற்றும் சார்பு துறைகள் தொடர்பான கோரிக்கை மனு அளிக்க விரும்பும் விவசாயிகள் கூட்ட அரங்கில் அளிக்கலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் மார்ச் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடை பெறுகிறது. இதில் விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு வேளாண்மைத்துறை மற்றும் சார்புத் துறைகள் தொடர்பான கோரிக்கை மனு அளிக்க விரும்பும் விவசாயி கள், கூட்ட அரங்கில் மனுக்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.