கள்ளக்குறிச்சி, நவ.27-ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி விழுப்புரம், கடலூர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் 1,104 கிராமங்கள், 13 வட்டங்கள், 4 கோட் டங்களுடன் 7,217 சதுர கி.மீ பரப்பில் 34.58 லட்சம் மக்கள் தொகை யுடன் (2011-கணக்கெடுப் பின்படி) மிகப் பெரிய மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளாக விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தினர். இதையேற்று விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பிரித்து கள்ளக் குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த ஜனவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று (நவ. 26) கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவி களையும் முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்.. புதிய மாவட்ட ஆட்சியராக கிரண்குரலாவும், எஸ்பியாக ஜெயச்சந்திரனும் ஏற்கெனவே நியமிக்கப்பட் டுள்ளனர்.
சிக்கல் தீருமா? சுற்றுலா மேம்பாடு கள்ளக்குறிச்சியா? கல்லைக்குறிச்சியா?
|
எல்லைகள்
3,520 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 23 குறு வட்டங்கள், 406 கிராம ஊராட்சிகள், 558 வருவாய் கிராமங்கள் உள்ளன. கள்ளக்குறிச்சியை தலைமை யிடமாகக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய வருவாய் கோட்டங்கள் உள்ளன. வருவாய் வட்டங்கள்: கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை (புதியது). நகராட்சி: கள்ளக்குறிச்சி, பேரூராட்சிகள்: திருக் கோவிலூர், சங்கராபுரம், தியாக துருகம், சின்னசேலம், வடக் கனந்தல், மணலூர்பேட்டை, உளுந் தூர்பேட்டை.
ஊராட்சி ஒன்றியங்கள்: கள்ளக் குறிச்சி, சின்னசேலம், ரிஷிவந் தியம், சங்கராபுரம், தியாகது ருகம், கல்வராயன்மலை, திருக் கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர்.
சட்டப்பேரவைத் தொகுதிகள்: கள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந் தியம், திருக்கோவிலூர்.
மக்களவைத் தொகுதிகள்: கள்ளக்குறிச்சி (பகுதியளவு), விழுப்புரம் (பகுதியளவு).
19 காவல் நிலையங்கள், 3 உட்கோட்ட காவல் பிரிவுகள் செயல்படுகின்றன. மாவட்டத் தில் தலைமையிடமான கள்ளக் குறிச்சியிலிருந்து அதிக தொலைவில் உள்ள கிராமமாக சங்கராபுரம் வட்டத்தைச் சேர்ந்த வாரம் கிராமம் உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மாவட்டம் உருவாக்கப் பட்டிருப்பது அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
-வ.சாமிநாதன்