tamilnadu

வங்கி அதிகாரிகள் மறுப்பு

கள்ளக்குறிச்சி, ஜூன் 29- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தநாடு இந்தியன் வங்கி கிளை மேலாளர் குறித்து திங்களன்று (ஜூன் 29) இதழில் வெளியான செய்தி குறித்து கிளை மேலாளர்கள் டி.என்.பரத் பத்மநாபன், அஜெய் தயாளன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். தங்களின் பணியை களங்கப்படுத்தும் வகையில் சிலர் திட்டமிட்டு செயல்படுவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு வங்கி நடைமுறைக்கு உட்பட்டே கடன்கொடுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.