கரூர், மே 11- கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி குமாரபாளையத்தில் உள்ள ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ரூ 45 ஆயிரம் தங்களது சொந்த நிதியில் இருந்து கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கினர். பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவர்களின் குடும்பத்திற்கும் ரூ 500 மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருட்கள் நிவாரணப் பொருள்களாக வழங்கப்பட்டது. மேலும் துப்புரவு பணியாளர் 5 பேருக்கும், ஆதரவற்ற வயதான மூதாட்டிகள் 5 நபர்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் த.சகிலா, ஆசிரியர்கள் சாந்தி, மீனாட்சி, நிர்மலா, மோனிகா சகாயரோஸ்லின், தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.