tamilnadu

விசாகா கமிட்டி அமைத்திட  மகளிர் பேரவை வலியுறுத்தல்

 கரூர்: கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு பேரவை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணி யன் தலைமை வகித்தார். மக ளிர் துணைக்குழு நிர்வாகி தனலட்சுமி வரவேற்று பேசி னார். மாவட்ட அமைப்பாளர் செல்வராணி வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் சிறப்புரை யாற்றினார். மாவட்ட மகளிர் துணைக் குழுவின் புதிய அமைப்பாளராக சிவகாமி தேர்வு செய்யப்பட்டார். மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை மாவட்டத்தில் மெ ழுகுவர்த்தி ஏந்தி கூட்டத்தை நடத்துவது, விசாகா கமிட்டி யினை மாவட்டத்தில்  உடன் அமைத்திட வேண்டும். ஆட்சி யர் அலுவலகத்தில் பணி புரிந்து வரும் பெண்களுக்கு என தனி பாலூட்டும் அறை ஒதுக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.