tamilnadu

img

தோழர் கே.வரதராசன் படத்திறப்பு

கரூர், மே 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் கே.வரத ராசன் கடந்த சனிக்கிழமை காலமானார். கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் தோழர் கே.வரதராசனின் படத் திறப்பு நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்த சாமி தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, தோழர் கே.வி. உருவப்படத்தை திறந்து வைத்து பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவா னந்தம், எம்.ஜோதிபாசு, சி.முருகேசன் ஆகியோர் தோழர் கே.வரதராசனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.தண்டபாணி, எஸ்.பி.ஜீவானந்தம், ஆர்.ஹோச்சுமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
மறைந்த தோழர் கே. வரதராஜனுக்கு இரங்கல் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றி யக்குழு சார்பில் கட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.திரு ஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
சீர்காழி
மறைந்த தோழர் கே.வரத ராஜன் நினைவஞ்சலி நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சீர்காழி வட்டக் குழு சார்பில் நடை பெற்றது. மாவட்டச் செயற் குழு உறுப்பினரும், வட்டச் செயலாளருமான சி.வி.ஆர்.ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.