tamilnadu

img

ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர்

சிதம்பரம், டிச.15 - கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி யுள்ளன. இதனால் பாசனம் மற்றும் வடிகால் வாய்கால்களில் ஆகாய தாமரை செடிகள் அதி கம் வளர்ந்துள்ளால்,  தண்ணீர் வேகமாக செல்ல முடிவதில்லை. ஆகவே, சிதம்பரம் நகரத்தையொட்டி யுள்ள தில்லையம்மன் ஓடை, கான்சாகிப் வாய்கால், பாசிமுத்தான் ஓடை என பாசனம் மற்றும் வடிகால் வாய்கால்களில் உள்ள ஆகாய தாமரை செடிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் தலைமையிலான  ஊழி யர்கள் ஆகாய தாமரை செடி களை வலைகளை கொண்டு அகற்றி வருகிறார்கள்.