tamilnadu

img

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி

சிதம்பரம், டிச. 21- கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 41 ஊராட்சி கிரா மங்களும், 18 ஒன்றிய வார்டுகளும் உள்ளது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்த லில் இந்த ஒன்றியத்திற்கு 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளு டன் உடன் ஏற்படாததால் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வார்டு எண் 12 -ல் பு.மடுவங்கரை மு.ராஜப் பிரியா, வார்டு 14 பள்ளிப்படை எஸ்.பர்வீன்  பானு, வார்டு 16 சி.கொத்தங்குடி, ஆர். கோபால கிருஷ்ணன், வார்டு 17 பிச்சாவ ரம் க.விஜயலட்சுமி ஆகிய 4  பேர் போட்டி யிடுகிறார்கள். அதேபோல் பரங்கிப்பேட்டை ஒன்றி யத்தில்  பி.முட்லூர் என். ஜெயசீலன், வில்லிய நல்லூர் ம.அஞ்சம்மாள்,  சி.முட்லூர் ப. வேதநாயகி, பெரியகுமட்டி மே.ராமாயி,  நஞ்சைமகத்து வாழ்க்கை ஏ.தனக்கொடி ஆகிய ஐந்த ஊராட்சிமன்றத் தலைவர் பத விக்கும் போட்டியிடுகிறார்கள். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.  ரமேஷ்பாபு தலைமை வகித்தார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் மூசா செவ்வாடை  அணி வித்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச் செல்வம், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாதர் சங்கச் செயலாளர் மல்லிகா, தலைவர் அமுதா, கட்சியின் நகர் குழு உறுப்பி னர் சுந்தரமூரத்தி உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.