tamilnadu

img

கெடிலம் ஆற்று வெள்ளத்தால் செம்மேடு பாலம் சேதம்

கடலூர், டிச.6- பண்ருட்டி அருகே மழை வெள்ளத்தால் செம்மேடு பாலம் சேதமடைந்து போக்கு வரத்து துண்டிக்கப்பட்டதுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமான பணியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பண்ருட்டி அருகே செம்மேடு கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டுவரும் மேம்பாலம் மற்றும் கட்டுமான பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மேம்பால கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது.

மேலும் ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வந்த தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளதால், எஸ்.ஏரிப்பாளையம் வழியாக செம்மேடு, கருக்கை, முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் 10 கற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.