tamilnadu

img

குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு வரிவசூல் செய்யக் கூடாது: சிபிஎம்

சிதம்பரம், மார்ச் 18- கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் சாலைகளும், குடி நீர் குழாய்கள் சேதமடைந்து உள்ளது. சாலைகள் சேத மடைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கிறது. நகராட்சியின் 7 ஆவது வார்டில் உள்ள காரிய பெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணியன் தெருவில் பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடையாது. மேலும் பல வீடுகளுக்கு தண்  ணீர் வருவதே கிடையாது. ஆனால் எல்லா வீடுகளுக் கும் குடிநீர் வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும், குடிநீர் பற்றாக்குறை காரணமாக பலர் வீடுகளில் கைபம்புகள் மூலம் நிலத்தடி நீரை குடி நீராக பயன்படுத்தி வரு கின்றனர். ஆனால் இதற்கும் நகராட்சி மூலம் ஆபத்து உரு வாகியுள்ளது. சிதம்பரம் நகராட்சி 7வது வார்டில், பாதாள சாக்கடை திட்டத் தில் ஆள்தூக்கி கழிவுநீர் உந்து நிலையம் அமைகப் பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால் மக்களின் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் காதில்  வாங்காமல் இந்த நிலை யத்தை அமைத்தனர்.  30 அடி ஆழத்தில் கழிவு  நீர் தேக்கப்படுவதால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளின் அடிபம்புகளில் கழிவுநீர் குடி நீருடன் சேர்ந்து நாற்றத்து டன் வருகிறது. இந்த கழிவுநீர் உந்து நிலையம் 20 ஆவது வார்டில் உள்ள வ.உ.சி தெருவில் அமைக்கப்பட வேண்டியது. ஆனால் 7 ஆவது வார்டு, காரியபெருமாள் கோவில் தெருவில் அமைத்துள்ளனர். இந்த  கட்டிடத்தின் மீது வ.உ.சி தெருவில் அமைக் கப்பட்டுள்ளதாக எழுதியு ள்ளனர். இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து உரிய விசா ரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தி யுள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட ஆள்தூக்கி கழிவுநீர் உந்து நிலையத்தை பொதுமக்கள் இல்லாத இடத்தில் மாற்ற வேண்டும், குடிநீர் இணைப்பு இல்லா வீடுகளுக்கு வரி வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் சிதம்பரம் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.