tamilnadu

நுண்கடனை கட்டாயப்படுத்தி வசூலித்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர், ஜூலை 26- கடலூர் மாவட்டத்தில் நுண்கடனை கட்டாயப்படுத்தி வசூலித்தால் நட வடிக்கை எடுக்கப்படும் என்று  ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி எச்ச ரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடனிற்காக மாதம் தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை  ஜூன் 1ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை 3 மாத காலத்திற்கு  ஒத்தி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் மக்களின் இடர்பாடுகளை அறிந்து நுண் நிதி  நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மாத கடன் தவணைத் தொகையை  கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை தவிர்க்குமாறு  கேட்டுக்கொள்ளப்படு கிறது மீறி வசூலில் ஈடுபடும் நிதிநிறுவனங்களுக்கு எதிராக புகார் அளிக்க  விரும்பும் நபர்கள் இணையதள முகவரியிலும் மற்றும் தொலைப்பேசி எண்கள் 100 மற்றும் 1077 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நுண் கடன் கட்டாய வசூல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.